தமிழ்நாடு

tamil nadu

கோவையில் இன்று 549 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Sep 16, 2020, 7:50 PM IST

கோவை: இன்று 549 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.

Kovai latest corona update
Kovai latest corona update

கோவையில் இன்று (செப். 16) 549 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த 707 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details