தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 24, 2019, 12:31 PM IST

ETV Bharat / state

40 ஆண்டுகளுக்கு பிறகு பரவும் நோய்!

கோவை: 40 ஆண்டுகளுக்கு பிறகு தொண்டை அடைப்பான் நோய் பரவியிருப்பதாகவும், அந்நோய் பாதித்த ஒன்பது பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனை முதல்வர்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் தமனி நாளம் வீக்கம் ஏற்பட்டு, சுமார் 1.5 சென்டிமீட்டர் விட்டம் இருக்க வேண்டிய தமனி நாளம்,10 மடங்கு பெரிதாகி 15 சென்டிமீட்டரிலிருந்த நிலையில் சிகிச்சைக்காக வந்தார்.

உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் தனியார் மருத்துவமனையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில தனியார் மருத்துவமனையில் மட்டுமே செய்யப்பட்டும் இந்த அறுவை சிகிச்சை முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கடம்பூர் மலைப்பகுதியில் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட எட்டு முதல் 16 வயதுடைய ஒன்பது பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்நோய் பரவியிருக்கிறார்.

ஒன்பது பேரும் உடல் நலம் தேறிவருகின்றனர். நோய் தாக்கியவர்களிடமிருந்து எச்சில், தும்மல் உள்ளிட்டவை மூலம் நோய் பரவும். ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்தது.

அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன்

தற்போது புதுச்சேரியிலிருந்து போதிய மருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளது. தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகள். இந்நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details