கோவையில் இன்று (செப்.23) 587 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் இன்று 587 பேருக்கு கரோனா உறுதி - kovai Latest News
கோவை : இன்று (செப்.23) 587 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.
![கோவையில் இன்று 587 பேருக்கு கரோனா உறுதி kovai Corona Update](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:34:10:1600877050-tn-cbe-06-corona-update-photo-script-tn10027-23092020213258-2309f-1600876978-695.jpg)
kovai Corona Update
கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த 512 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளது.