கோவையில் இன்று (செப்.9) 445 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 393 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் இன்று 445 பேருக்கு கரோனா உறுதி! - Kovai district News
கோவை : இன்று (செப்.9) 445 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 393 ஆக உயர்ந்துள்ளது.
Kovai Corona update
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 580 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.