தமிழ்நாடு

tamil nadu

கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதி உயிரிழப்பு!

கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

By

Published : Jan 16, 2020, 11:55 AM IST

Published : Jan 16, 2020, 11:55 AM IST

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு..! மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு.. கோவை மத்திய சிறை கைதி உயிரிழப்பு Kovai Prisioner Death Kovai Central Jail Death Kovai Central Jail Prisoner Death Kovai Central Jail Death
Kovai Central Jail Death

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (59). இவர் தனது மனைவி பாப்பா என்பவரைக் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி கொலை செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் 1.45 மணியளவில் ரங்கசாமிக்கு சிறையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறைக்காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை மத்திய சிறை

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து, சடலத்தை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இன்று உடற்கூறாய்விற்குப் பிறகு அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க சிறைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:

ரயில் வழித்தடத்தைக் கடக்க முயன்ற 70 வயது மூதாட்டி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details