கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (59). இவர் தனது மனைவி பாப்பா என்பவரைக் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி கொலை செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் 1.45 மணியளவில் ரங்கசாமிக்கு சிறையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறைக்காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.