தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து! - kovai car hits auto

கோவை: சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது காரை வேகமாக காரை ஓட்டி வந்து அடையாளம் தெரியாத இளைஞர்கள் மோதியதில் ஆட்டோ சுக்குநூறாக சேதமடைந்தது.

accident
accident

By

Published : Aug 19, 2020, 10:52 PM IST

கோவை சாய்பாபா காலனி பகுதியில் வசித்துவருபவர் லோகநாதன். இவர் தனது சொந்த ஆட்டோவை அருகில் வசிக்கும் கிங்ஸ்டன் என்பவருக்கு வாடகைக்கு ஓட்ட தந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கமாக கிங்ஸ்டன் ஆட்டோவை நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், இன்று அதிகாலை அப்பகுதியில் வேகமாக காரை ஓட்டி வந்த அடையாளம் தெரியாத ஐந்து இளைஞர்கள் நின்று கொண்டிருந்த அந்த ஆட்டோவின் மீது மோதி உள்ளனர்.

இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது. இதையடுத்து விபத்து குறித்து ஆட்டோவின் உரிமையாளர் லோகநாதன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'சட்டம் மக்கள காப்பாற்றவா, இல்ல புதைக்குழியில போட்டு புதைக்கவா?' - ஆட்டோ ஓட்டுநரின் குமுறல்

ABOUT THE AUTHOR

...view details