தமிழ்நாடு

tamil nadu

வன்முறையைத் தூண்டும் இஸ்லாமியர்கள் - காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு

By

Published : Mar 12, 2020, 10:10 AM IST

கோயம்புத்தூர்: மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக இஸ்லாமியர்கள் வன்முறையைத் தூண்டிவருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

kadeshwara subramani
kadeshwara subramani

கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், "அடையாளம் தெரியாத நபர்கள் இந்து முன்னணி அமைப்பினரின் சொந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளனர். இதுவரை அந்த அடையாளம் தெரியாத நபர்கள் பிடிபடவில்லை. இதன்மூலம் இந்து முன்னணி காவல் துறையின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது.

இஸ்லாமியர்கள் வன்முறையைத் தூண்டும்விதமாக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக சாலைகளை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். அமைதியை வேண்டி இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர் நடத்தும் கோயில் பிரார்த்தனைகளில் இஸ்லாமியர்கள் வந்து கொலை மிரட்டல்விடுக்கின்றனர்" என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: காட்டிக்கொடுத்த டேப்... மாட்டிக்கொண்ட கொலையாளிகள் - காவலாளி கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details