கோயம்புத்தூர்: சென்னையில் உள்ள பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன், "1979ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர், பெரியார் நினைவாக சூட்டிய இந்தப் பெயர் நீக்கப்பட்டடுள்ளது கண்டிக்கத்தக்கது.
பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை பெயர் மாற்றப்பட்டத்திற்கு எதிர்ப்பு - CHENNAI EVR PERIYAR HIGHWAY NAME CHANGE ISSUE
பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வரும் 16ஆம் தேதி புதிய பெயர் பலகையை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை பெயர் மாற்றம், K RAMAKRISHNAN , கோவை ராமகிருஷ்ணன், CHENNAI EVR PERIYAR HIGHWAY NAME CHANGE ISSUE, தபெதிக
த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் பேட்டி
மேலும், இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் ஏப்ரல் 16ஆம் தேதி சென்னை பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்ற பெயர் பலகையை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை; திமுக மீண்டும் நிலைநிறுத்தும் - வைகோ!
Last Updated : Apr 13, 2021, 8:08 PM IST