கி.ராஜநாராயணன் எழுதிய மிச்சக்கதைகள் நூல் வெளியீட்டு விழா கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் அருகிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்களான ஜெயமோகன், நாஞ்சில் நாடன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நாஞ்சில் நாடன் பேசுகையில், "எழுத்தாளர்களைக் கௌரவிக்க அரசு விண்ணப்ப நடைமுறைகளைப் பின்பற்றுவது வெட்கமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. கி.ரா.வின் வட்டாரச்சொற்கள் கெட்டவார்த்தை என நினைத்து நிகழ்கால எழுத்தாளர்கள் அவரின் வட்டாரச்சொற்களை புறக்கணிப்பது வேதனையாக இருக்கிறது" என தெரிவித்தார்.