உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் இறந்த பெண்ணின் உடலை உறவினர்களிடம் கூட வழங்காமல் காவல்துறையினர் எரித்துவிட்டனர்.
இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களையும் செய்தி சேகரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் தாண்டி செய்தி எடுக்க சென்ற பெண் ஊடகவியலாளர் மற்றும் ஒளிப்பதிவாளரையும் அங்குள்ள காவல்துறையினர் தடுத்தனர்.