தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் சுயேச்சை வேட்பாளர் திடீர் மயக்கம் - soolur vote counting center

கோவை: சூலூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மயக்கமடைந்த சுயேச்சை வேட்பாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் காவல் துறை வாகனத்தில் கொண்டுசென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சூலூர் வாக்கு எண்ணும் மையத்தில் சுயேச்சை வேட்பாளர் மையம்  கோவை மாவட்டச் செய்திகள்  coimbatore district news  soolur vote counting center  independent candidate get unconscious in vote counting center
சூலூர் வாக்கு எண்ணும் மையத்தில் சுயேச்சை வேட்பாளர் மயக்கம்

By

Published : Jan 3, 2020, 9:49 AM IST

கோவை மாவட்டம் மயிலம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு கணேசன் என்பவரது மனைவி விஜயா சுயச்சையாக போட்டியிட்டார். இந்நிலையில் சூலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை மையத்தில் மைலம்பட்டி ஊராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதனை சுயேச்சை வேட்பாளர் விஜயா கண்காணித்துக் கொண்டிருந்தார் அப்போது திடீரென விஜயா மயக்கம் அடைந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை வெளியே தூக்கி வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் எதுவும் இல்லாததால் அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் விஜயாவை சுமார் 500 மீட்டர் தூக்கிக்கொண்டு ஓடினர்.

சூலூர் வாக்கு எண்ணும் மையத்தில் சுயேச்சை வேட்பாளர் மயக்கம்

பின்னர் அங்கிருந்த காவல் துறை வாகனத்தில் விஜயாவை ஏற்றி சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நீண்ட நேரமாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் நின்று கொண்டிருந்ததால் மயக்கமடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

ABOUT THE AUTHOR

...view details