கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று(பிப்.1) கோவை தெற்கு மண்டலம் 94ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளராகப்போட்டியிட உள்ள சக்திவேல் (45) என்பவர் குனியமுத்தூர் மண்டல அலுவலகத்தில் கரோனா கவச உடை அணிந்து வந்து மனுதாக்கல் செய்தார். இவரைக் கண்ட அலுவலர்கள், பொதுமக்கள் வியப்படைந்தனர்.