கோவை பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீ வாசவி செயின்ஸ் என்ற நகைக் கடையிலும், அதன் உரிமையாளர் பாலமுருகனின் வீட்டிலும் வருமானவரித் துறை அலுவலர்கள் ஆறு பேர் காலை 11:30 மணி அளவில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் அதே பகுதியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான கந்தா சில்வர்ஸ் என்ற மொத்த வியாபார கடையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையானது பணமதிப்பிழப்பின்போது பல லட்சம் மதிப்புள்ள ரூபாய்களை வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்த புகாரின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.