தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறையில் அட்டகாசம் செய்யும் காட்டு யானை கூட்டம்! - In coimbatore Valparai elephant attack

கோவை: வால்பாறை பகுதியில் காட்டு யானை கூட்டம் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து சேதப்படுத்துவதையடுத்து, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வால்பாறையில் அட்டகாசம் செய்யும் காட்டு யானை கூட்டம்!
வால்பாறையில் அட்டகாசம் செய்யும் காட்டு யானை கூட்டம்!

By

Published : Nov 26, 2019, 11:35 PM IST

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றியும், இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புகள் மளிகைக்கடை, சத்துணவுக்கூடம், ரேசன்கடைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை நாசம் செய்வது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் இரண்டு யானைகள் தாய்முடி எம்.டி டிவிசனில் துளசி மகளிர் சுயஉதவிக்குழு நியாயவிலைக் கடையிலிருந்த சுவர் மற்றும் தகரத்தை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த அரிசி, பருப்பு, சக்கரை ஆகியவற்றை சேதம் செய்துள்ளது.

வால்பாறையில் அட்டகாசம் செய்யும் காட்டு யானை கூட்டம்!

அப்போது, ஊர்மக்கள் வந்து பட்டாசு வெடித்தும் அங்கிருந்து யானையை நகர வைத்துள்ளனர். பின் அங்கிருந்து சென்று தேயிலை செடியில் மறைந்து தஞ்சம் புகுந்த யானையை, வனத்துறையினர் அடர் வனப்பகுதிகுள் விரட்டி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க... தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பால் ஆபத்தானதா?

ABOUT THE AUTHOR

...view details