தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கனமழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்! - Coimbatore District News

கோவையில் காலையிலிருந்து மாலை வரை ஆங்காங்கே பெய்த கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையில் பலத்த மழை
கோவையில் பலத்த மழை

By

Published : Oct 21, 2020, 3:49 AM IST

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்.20) காலை 11 மணி அளவில் கோவை மாநகர் பகுதிகளான ரயில் நிலையம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்பதனம் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையில் பலத்த மழை பெய்யும் காட்சி
அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் இருந்து கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, ஆலந்துறை ஆகிய பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. மேலும் தடாகம், கணுவாய், துடியலூர் ஆகிய பகுதிகளில் 4 மணி அளவில் லேசான மழை பெய்தது. இதனால் கோவையில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. இதனிடையே கோவை அவினாசி மேம்பாலத்தின் கீழ் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அனைத்து வாகனங்களும் பாலத்தின் மேல் சென்றதால் வாகனங்களுக்கிடையே நெரிசல் ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details