தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2019, 7:54 AM IST

ETV Bharat / state

பணியின்போது மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கோவை: அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் பணியில் இருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

doctor

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு பகுதியில் வசித்துவந்தவர் பழனிச்சாமி(49). இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயன்முறை மருத்துவராக பணியாற்றி வந்தார்.

நேற்று வழக்கம்போல பணிக்கு வந்த அவர், மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றபோதே திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பழனிச்சாமிக்குக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண் வயிற்றில் கட்டியா, கர்ப்பமா என்பது கூட தெரியாத மருத்துவர்கள்

ABOUT THE AUTHOR

...view details