தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து ஓட்டும்போது மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுநர்..

பொள்ளாச்சியில் பேருந்து ஓட்டும்போது அரசு ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By

Published : Oct 28, 2022, 9:22 AM IST

பேருந்தை ஓட்டும்போதே மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஓட்டுநர்..
பேருந்தை ஓட்டும்போதே மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஓட்டுநர்..

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் செல்லும் 7A எண் கொண்ட அரசு பேருந்தை ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்து மீன்கரை சாலை இரட்டை பாலம் வழியாக செல்லும்போது, ஓட்டுநர் மருதாச்சலத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் மருதாச்சலம், அருகில் இருந்த சுவற்றின் மீது மோதி பேருந்தை நிறுத்தியவாறு ஸ்டேரிங் மீது சாய்ந்துள்ளார். இதனைக் கண்ட பயணிகள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழுவினர் விரைந்தனர். பின்னர் அவரை பரிசோதித்த போது ஓட்டுநர் மருதாச்சலம் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தன்னுடைய உயிர் பிரியும்போதும், பேருந்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பை ஓட்டுநர் மருதாச்சலம் உறுதி செய்துள்ளார்.

மேலும் நான்கு மாதத்தில் மருதாச்சலம் ஓய்வு பெற உள்ள நிலையில், வாரிசுதாரர் என்ற அடிப்படையில் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு பணி வழங்க அரசாணை வழங்க வேண்டும் என உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நடிக்கும்போது மேடையிலேயே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர் - கிராம மக்கள் சோகம்!

ABOUT THE AUTHOR

...view details