தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 3, 2022, 6:34 AM IST

ETV Bharat / state

கோவையில் பணத்தாசையில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது

கோயம்புத்தூரில் தோட்டத்திற்குள் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து கேரள வாகன ஓட்டுநர்களுக்கு விற்றுவந்த விவசாயியை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது

கோயம்புத்தூர்:காரமடையை அடுத்துள்ள சீலியூர் மேடூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கைய கவுடர், இவரது மகன் சம்பத். இவருக்குச் சொந்தமாகவுள்ள இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை, வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் சம்பத் அவரது தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா வளர்த்து விற்பனை செய்வதாக ஒருங்கிணைந்த குற்ற உளவுப்பிரிவு ஆய்வாளர் கமலி ஆனந்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காரமடை காவல் துறையினரின் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற அலுவலர்கள், தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதைக் கண்டறிந்தனர். இது குறித்து, சம்பத்திடம் விசாரணை செய்ததில், தோப்பிற்கு தேங்காய்களை கொள்முதல் செய்ய வரும் கேரள வாகன ஓட்டுநர்களுக்கு கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பத்தை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ கஞ்சா, மூன்று கிலோ அளவிற்கு பச்சையான கஞ்சா செடிகள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ரூ.300 கோடி பிட்காயின் சொத்துக்கு ஆசை - கடத்தலில் ஈடுபட்டு காவலர் கைது

ABOUT THE AUTHOR

...view details