கோவை: வால்பாறை அருகே குரங்குமுடியை ஒட்டிய வனப்பகுதியில் மல நாடு தனியார் எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் இரண்டு காட்டுயானைகளுக்குள் நடைபெற்ற மோதலில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கோவை மாவட்ட ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கால்நடை மருத்துவர் சுகுமார் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூராய்வு செய்தார்.