கோவை: ஆனைகட்டி அருகே சேம்புகரை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் நடத்திய ஆய்வில், யானையின் வாய், ஆசனவாய் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் பெண் யானை உயிரிழந்து கிடந்ததால், வனத்துறையினர் உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பரிசோதனை முடிவுக்குப் பின்னரே உடற்கூராய்வு
இதுகுறித்து வன அலுவலர் வெங்கடேஷ் பேசுகையில், 'யானைக்கூட்டத்தில் இருந்த பெண் யானை, தனியாக நகர்ந்து வந்து நோய்வாய்ப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பிருக்கின்றன. யானையின் உடலில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.