கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெத்திகுட்டை, காப்புக்காடு, மாத்தூர் பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வனத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் உயிரிழந்த பெண் யானைக்கு 25 வயது இருக்கும் எனவும், உடல்நலக்குறைவால் யானை உயிரிழந்து இருக்கலாம் என தெரியவந்தது.