தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2023, 1:13 PM IST

ETV Bharat / state

பைக்கில் சென்ற பெண்ணின் தாலி பறிப்பு.. முன்னாள் ராணுவ வீரர் கைது!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து தாலிச் செயினை பறித்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கோவை:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இருச்சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பின்னால் வந்து கொண்டிருந்த இருச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் ராதாமணியின் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

அதன் பின்னர் ராதாமணியின் மகன் அவர்கள் இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தார். ஆனாலும் அதில் ஒருவர் தாலிச் செயினுடன் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் பிடிபட்ட நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!

துடியலூர் போலீசார் பிடிப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிநாதன்( வயது 43) என்பதும், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், 7 வருடங்களுக்கு முன்னர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் தெரியவந்தது. பின்னர், பழனிநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபர் என்பது யார்? இவர்கள் மீது ஏற்கனவே வழக்கு ஏதேனும் நிலுவையில் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த சாலையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பறித்துச் சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆபாச வீடியோ புகாரில் பாதிரியார் ஆன்றோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

ABOUT THE AUTHOR

...view details