கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குள்பட்ட மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் சாலை சம்பரவள்ளி பிரிவில் தனியாருக்குச் சொந்தமான சுற்றுச்சுவரில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளைத் தடுக்க ஈட்டிகள் பதிக்கப்பட்டிருந்தன.
இச்சுவரில் அமைக்கப்பட்ட ஈட்டிகளால் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வனத் துறைக்கு அதனை அகற்ற கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான செய்தி ஈடிவி பாரத் தமிழில் ஜனவரி 3ஆம் தேதி வெளியானது.