பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி அருகே உள்ள நவமலை பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புக்குள் அடிக்கடி ஒற்றைக் காட்டு யானை புகுந்து அச்சுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காளியப்பன் என்பவரின் ஓலைக் குடிசையை யானை சேதப்படுத்தியுள்ளது.
மேலும், ஏற்கனவே இந்த யானை தாக்கி பலியான மாகாளி என்பவரது வீடும் அதன் மூலம் சேதப்படுத்தபட்டுள்ளது. இந்தத் தகவலையறிந்த வனத்துறையினர் அதிகாலை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துவிட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.