தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகாமிட்டுள்ள யானைகள் - அச்சப்படும் மக்கள்! - Coimbatore latest news

கோவை: வனங்களை விட்டு வெளியேறிய யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

elephant in residential area
elephant in residential area

By

Published : Feb 7, 2020, 7:14 AM IST

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் வனங்களை விட்டு வெளியேறி கடந்த சில நாட்களாக மக்கள் வசிக்கும் பகுதியில் முகாமிட்டுள்ளன. மேலும் குடியிருப்புகள், சத்துணவு கூடங்கள், நியாயவிலை கடைகள் ஆகியவற்றை யானைகள் சேதப்படுதியுள்ளன. இதனால் வெளியில் செல்லவே அச்சமாய் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக சின்கோனா, ஈட்டியார் சோலையார் அணை, நல்லமுடி, பூஞ்சோலை, ரொட்டிக் கடை, பழைய வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் எஸ்டேட் தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். பகல் நேரங்களில் யானைகள் முகாம் இட்டுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

முகாமிட்டுள்ள யானைகள் - அச்சப்படும் மக்கள்

எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் எனவும் வனத்துறையினர் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ”ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...” மிட்டாய் குதூகலத்தில் 90’ஸ் கிட்ஸ்..!

ABOUT THE AUTHOR

...view details