கோவை: மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நாள்தோறும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. வழக்கமாக இரவு நேரத்தில் மட்டும் யானைகள் ஊருக்குள் வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களிலேயே யானைகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் கொண்ட கூட்டம் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றி வந்தது. பின்னர் மாலை 5 மணி அளவில் கணிதவியல் துறை அருகே முகாமிட்டன. இதனை பார்த்த மாணவர்கள் பயத்தில் வகுப்பறைக்குள்ளேயே முடங்கினர்.