கோவை மாவட்டம் பன்னிமடை சஞ்சீவி நகரில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவரது வீட்டில் தாங்களாகவே மின் இணைப்பை எடுத்து வீட்டின் முன்கேட் பகுதியில் மின்விளக்கு ஒன்றை பொருத்தியுள்ளனர். பின்னர், அதனைக் கழட்டி முன் பக்க கேட்டின் அருகிலேயே போட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவர்கள் தூக்கிப்போட்ட மின் ஒயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதை ரவிக்குமார் குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதற்கிடையே ரவிக்குமார் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் துர்க்கையம்மாள் மின் ஒயர் கிடப்பதை கவனிக்கால் கேட்டை திறக்க முற்பட்டுள்ளார்.