தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு! - வனத்துறையினர்

கோயம்புத்தூர்: ஆனைகட்டி பகுதியில் ஒற்றை ஆண் யானை தாக்கி டிராக்டர் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

By

Published : Sep 24, 2020, 11:00 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கேரள மாநிலம் அகழி பகுதியைச் சேர்ந்தவர் ஞானபிரகாஷ். டிராக்டர் ஓட்டுநரான இவர் ஆனைகட்டி பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று(செப் 24) வழக்கம்போல் விவசாய பணிக்காக ஆனைகட்டி அருகே உள்ள மூணு குட்டை பகுதியில் தங்கல்வேல் என்பவரது தோட்டத்தில் ஏர் உழும் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு ஏழு மணி அளவில் பணியை முடித்துவிட்டு தனது கிராமத்திற்கு நண்பர் அருண்குமார் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் தோட்டத்திலிருந்து வெளியே வந்த நிலையில் எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை திடீரென அவர்களை தாக்கியது. இதில் அருண்குமார் யானையிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் ஞானபிரகாஷ் யானையிடம் சிக்கினார். இதனையடுத்து அவரை தூக்கி வீசிய ஒற்றை யானை அங்கிருந்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ஞானபிரகாஷ் உயிரிழந்தார். இதுகுறித்து அருண்குமார் அங்குள்ளவர்களிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த வனத்துறையினர், ஞானபிரகாஷ் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இந்தப் பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் கவனத்துடன் வர வேண்டும், முக்கியத் தேவை இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும், இரவு நேரங்களில் வனப்பகுதியில் நடமாடக்கூடாது என்றனர்.

இந்த சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் சட்டத்தை ஏற்க மாட்டோம்: டி.ஆர். பாலு!

ABOUT THE AUTHOR

...view details