தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 14, 2019, 5:17 PM IST

ETV Bharat / state

அதிமுக கொடிக்கம்பத்தால் ஏற்பட்ட விபத்தைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

கோவை: அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனுராதா என்னும் பெண்மணியின் நிலைமைக்கு காரணமானவர்களைத் தண்டிக்கக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest

நவம்பர் 11ஆம் தேதி காலையில் கோவை அவிநாசி சாலை, கோல்டு விங்ஸ் பகுதியில் அதிமுக கொடிகள் கம்பங்களில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அனுராதா (எ) ராஜேஸ்வரி என்பவர் கொடிக் கம்பம் சரிந்து விழுவதைக் கண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவரது காலில் ஏறியது. இந்த விபத்தில் அவரது இடது கால் பெரும் பாதிப்பிற்குள்ளானது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள், பொது மக்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

இந்தப் போராட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பனர் கார்த்திக் காவல் துறை நடவடிக்கை எடுக்காதது, இந்த ஆட்சியின் அராஜகப் போக்கை காட்டுகிறது என்றும்; அனுராதாவிற்கு உதவ வந்த இளைஞரைப் பிடித்து காவலில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

மேலும் இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? - ஸ்டாலின் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details