தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய விவகாரம்: அதிமுக எம்எல்ஏக்கள் மீது புகார்! - admk sp velumasy petition

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

admk
அதிமுக

By

Published : Jul 30, 2021, 4:21 PM IST

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை எழுந்து நின்று மனுவை வாங்கும்படி வலியுறுத்தினர்.

ஆட்சியரை மிரட்டிய விவகாரம்

அந்த வீடியோவானது சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்ற கண்டனங்கள் எழுந்தது.

அதிமுக எம்எல்ஏக்கள் மீது திமுகவினர் புகார்

இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்டம் திமுக சூலூர் ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன் தலைமையில் சூலூர் காவல் நிலையத்திலும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:கணவனை கொன்ற மனைவி - குடும்ப தகராறு காரணமாக வெறிச்செயல்

ABOUT THE AUTHOR

...view details