தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 11, 2019, 4:25 PM IST

ETV Bharat / state

'மேட்டுப்பாளையம் விபத்து போல் கோவையில் நடந்து விடக்கூடாது' - எச்சரித்த திமுக எம்எல்ஏ

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஹவுசிங் யூனிட் குடியிருப்புகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ கார்த்திக் தெரிவித்துள்ளார்.

dmk-mla-karthick-pressmeet
dmk-mla-karthick-pressmeet

இதுதொடர்பாக வடகோவை திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில், ' கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள 960 ஹவுசிங் யூனிட் குடியிருப்புகள் 35 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டன. தற்போது அந்த குடியிருப்பு வீடுகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்தப் பிரச்னை குறித்து மூன்றாண்டுகளுக்கு முன்பே சட்டப்பேரவையில் நான் தெரிவித்தேன். ஆனால், அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த வாரம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். அதேபோன்ற சம்பவங்கள் கோவையிலும் நடைபெறக் கூடாது. எனவே சிங்காநல்லூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும்.

திமுக எம்எல்ஏ கார்த்திக் செய்தியாளர் சந்திப்பு

மூன்று ஆண்டுகள் இது குறித்து பேசியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வருகின்ற 13ஆம் தேதி திமுக சார்பில் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதையும் படிங்க: 17 உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல் மனதைக் கரைக்கவில்லை’ - ஸ்டாலின் காட்டம்!

ABOUT THE AUTHOR

...view details