தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி! - திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர்

கோயம்புத்தூர் மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர் கோகிலா வெற்றி பெற்றார்.

திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி
திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி

By

Published : Mar 26, 2022, 8:15 PM IST

கோயம்புத்தூர்: திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் திமுகவும் 7 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றன. கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சித் தலைவர் மறைமுகத் தேர்தலில் திமுக கவுன்சிலர் கவிதா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற துணைத் தலைவர் மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் கோகிலா என்பவரும் அதிமுக சார்பில் கலைவாணி என்பவரும் போட்டியிட்டனர். இதில் திமுக கவுன்சிலர் ஒருவரின் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தலா 7 வாக்குகள் பெற்றனர்.

இதனால் குலுக்கல் முறையில் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வாக்குச் சீட்டுக்களை கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர். இந்நிலையில் திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று (மார்ச் 26) பிற்பகல் நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கோகிலா என்பவர் 8 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுக வேட்பாளர் கலைவாணி 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதனையடுத்து திமுகவினர் திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:ஐந்து மொழிகளில் பீஸ்ட் - வெளியான புதிய போஸ்டர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details