தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் தம்மம்பதி கல்லாங்குத்து பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், பழங்குடி மக்கள் குடியிருப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள் அஸ்திவாரங்கள் மட்டும் அமைக்கப்பட்டு, அதுவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதைக் கண்டித்தும், ஒவ்வொரு வீட்டிற்கும் 3 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பழங்குடி மக்களை பாதுகாக்க வேண்டும், பழங்குடி மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய போது கொலை மிரட்டல் விடுக்கிற வாகை சேவை அறக்கட்டளையின் மீது நடவடிக்கை வேண்டும் என்றும், குடிநீர், பாதை, மின்சாரம், பொதுக்கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.