தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2020, 12:42 PM IST

ETV Bharat / state

வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி மறியல் போராட்டம்

கோயம்புத்தூர்: வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மறியல் போராட்டம்
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மறியல் போராட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மறியல் போராட்டம்

அப்போது அவர்கள் அனைத்து குடும்பங்களுக்கும் 7,500 ரூபாய் வழங்க வேண்டும், தேவைப்படும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, வங்கி, விமான நிலையம் உள்ளிட்டவற்றை தனியாருக்கு வழங்கக்கூடாது, வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மறியல் போராட்டம்

பின்னர் போராட்டக்காரர்கள் காவல் துறையினரின் தடுப்புகளை தூக்கி எறிந்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். உடனே அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மறியல் போராட்டம்

இதேபோன்று கோயம்புத்தூர் மத்திய போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆட்டோ ஊழியர்கள் சங்கத்தினரும், திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு மத்திய அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details