கோயம்புத்தூர்:தமிழ்நாடு அரசு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயில் இருந்து, 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 41 ரூபாயில் இருந்து 44 ரூபாயாக நிர்ணயம் செய்து இரண்டுக்கும், மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்கத்தின் கோவை மாவட்டத்தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.