தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சைக்கிளிலேயே உத்தரப் பிரதேசம் செல்லும் வட மாநிலத்தவர்கள்! - சைக்கிளிலேயே உ.பி செல்லும் தொழிலாளர்கள்

கோயம்புத்தூர்: உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாததால், வடமாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சைக்கிளிலேயே உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளனர்.

north indian
north indian

By

Published : May 1, 2020, 8:49 PM IST

கரோனா காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மாநில எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வேளியே வந்து செல்கின்றனர். இதனால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் நகர்ப்புறங்களில் பசிக்கொடுமையால் சிக்கித் தவித்து இறப்பதை விட சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி நடந்தே செல்கின்றனர். அந்தவகையில், உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த ஜியேந்தர சிங், மோகன் சர்மா, அஜித் சிங், தேவேந்திர சிங் ஆகியோர் சைக்கிளிலேயே சொந்த ஊருக்குச் செல்ல தயாராகியுள்ளனர்.

கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் கல்லுடைக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த நான்கு பேரும், கடந்த ஒரு மாதமாக எந்தவொரு வேலையுமில்லாமல் வருமானமின்றி பசியுடனேயே நாட்களைக் கடத்தியுள்ளனர். வீட்டு வாடகை கொடுப்பதற்கும், ஒரு வேளை சாப்பாட்டிற்கும் கூட பணமில்லாததால் நான்கு பேரும் ஊர் திரும்ப முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தில் நான்கு சைக்கிள்களை வாங்கியுள்ளனர். கடந்த 29ஆம் தேதி காலை சாலக்குடியில் இருந்து நான்கு பேரும் சைக்கிளில், உத்தரப் பிரதேசம் நோக்கி தன்னம்பிக்கையுடன் புறப்பட்டனர். இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் மாலை நேரத்தில் நான்கு பேரும் சைக்கிளில் வருவதைக் கண்ட தன்னார்வலர்கள் அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.

உத்தரப் பிரதேசத்திற்கு சைக்கிளில் செல்லும் வட மாநிலத்தவர்கள்

அப்போது, அவர்கள் கேரள மாநிலத்தில் வேலை செய்ததும், கையில் பணமில்லாததால் மிதிவண்டியில் ஊர் திரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நான்கு பேருக்கும் உணவு கொடுக்கப்பட்டது. வாடி வதங்கும் வெயிலில் வந்த நான்கு பேரும் பசியாற உணவு சாப்பிட்டு சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சைக்கிளில் உத்தரப் பிரதேசம் நோக்கி கிளம்பினர்.

எனவே, முறைசாரா தொழிலாளர்களின் நிலையறிந்து அவர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையை கலக்கும் சாம்சங்

ABOUT THE AUTHOR

...view details