கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நேற்று சுவரிடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தை இன்று நேரில் பார்வையிட்ட சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், "வீட்டின் சுற்றுச்சுவரை இவ்வளவு உயரமாக கட்டவேண்டிய அவசியமில்லை.
சுற்றுச்சுவர் பாதுகாப்பாக இல்லையென இரு தினங்களுக்கு முன்பே உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவத்திற்கு வீட்டின் உரிமையாளரும், அரசு அலுவலர்களும் பொறுப்பேற்க வேண்டும். இப்பகுதியில் பாதுகாப்பற்ற சுற்றுச்சுவர்களை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.