சினிமாவை போன்றே தாதாக்களின் வாழ்க்கை சந்தேகம் நிறைந்ததாகவே இருக்கும் என்பதை அங்கொடா லொக்காவின் மரணம் நிரூபித்துள்ளது. இலங்கை தாதா அங்கொடா லொக்காவை சர்வதேச நாடுகள் தேடி வந்த நிலையில், கோவையில் தனது காதலியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 5ஆம் தேதி இறந்த நிலையில், பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், அங்கொடா மரணம் குறித்த வழக்கை விசாரிக்க 7 தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்தார். அதனடிப்படையில், சிபிசிஐடி டிஎஸ்பி ராஜூ தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.