தமிழ்நாடு

tamil nadu

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலலேயே கரோனா பரிசோதனை!

By

Published : Sep 1, 2020, 10:59 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகர்புறப்பகுதியில் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்யப்படும் என உதவி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Corona test at home for people with flu symptoms!
கோவை கரோனா விவரங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தொடர் காய்ச்சல், சளி இருந்தால் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கரோனா தடுப்பு மையத்தின் 04259 224855 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.

பெயர்,முகவரி, தொலைபேசி எண் அளித்தால் செவிலியர், லேப் டெக்னீசியன் வாகனத்தில் வந்து நேரடியாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என உதவி ஆட்சியர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details