தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அச்சத்தால் ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை - ரயில்வே காவல்துறையினர் விசாரணை

கோவை: கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இளைஞர் சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coronation fear: Youth commits suicide by jumping on freight train
Coronation fear: Youth commits suicide by jumping on freight train

By

Published : Jul 1, 2020, 5:24 PM IST

கோவை மாவட்டம் இருகூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அரசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கண்ணனுக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

இதனால் அச்சமடைந்த அவர், தனக்கு கரோனா காய்ச்சல் வந்து விட்டதாக அவரது நண்பர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். மேலும், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் வீட்டிலிருந்து சென்ற கண்ணன், மதியம் வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி உள்ளனர். அப்போது இருகூர் ரயில் நிலையம் பகுதியில் சரக்கு ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல் துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், கரோனா அச்சம் காரணமாக இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

கரோனா அச்சம் காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மணப்பாறை அருகே பெண் காவலர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details