கோவை மாவட்டம் பொள்ளாச்சி காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது அவருக்கு சளி, காய்ச்சலிருந்ததால் அவரின் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது