கோயம்புத்தூர்:கவுண்டம்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கேக் கடை ஒன்றில் (யம்மி கேக்ஸ்), கேக் கண்காட்சி நடைபெற்றது.
இதில் 100 வகையான வண்ண, வண்ண கேக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. குழந்தைகளுக்கு பிடித்தாற் போன்று பொம்மை கதாபாத்திரங்கள், பைக், கார் போன்ற பல வடிவிலான கேக்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அதில் கரோனா வைரஸ் வடிவம், மருத்துவர் இருப்பது போன்ற கேக்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கேக்குகள் தொடர்பான காணொலி கண்காட்சிக்கு வந்த பலரும் கேக்குகளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டர். சிலர் அதே போன்ற கேக்குகளை, தயாரிக்கச் சொல்லி பெற்றுச் சென்றனர். இந்த கண்காட்சி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதத்தில் அமைந்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கேரளா, மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா - வருகிறதா 3ஆம் அலை!