கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கப்பினிபாளையம் முதல் பெரியகளந்தை இணைப்புச் சாலை வரை உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு நேற்று (ஆக. 25) பூமி பூஜை நடைபெற்றது. இதற்குச் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கி பணிகளைத் தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கிய அவர், அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.