தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் பல்கலை., விடுதியில் முதலாமாண்டு மாணவர் தற்கொலை - வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் தற்கொலை

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்த மாணவர் விடுதியில் தற்கொலையால் உயிரிழந்தார்.

மாணவர் தற்கொலை
மாணவர் தற்கொலை

By

Published : Aug 10, 2022, 7:20 PM IST

கோயம்புத்தூர்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பழனி. இவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரோதாஸ் குமார் (19). கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தார்.

பிரோதாஸ் குமார் பி.எஸ்.சி வனவியல் (BSC - forest) படிக்க விருப்பப்பட்ட நிலையில், அந்த துறை கிடைக்காததால் பயோடெக் படித்து வந்தார். இதனால் மன உலைச்சலில் இருந்த பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒரு முறை வீட்டில் இருந்த போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த பிரோதாஸ் குமார் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:விழுப்புரம் அருகே மீண்டும் ஒரு மரணம்... பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details