தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்! - தாய் குழந்தைகள் தற்கொலை முயற்சி

கோயம்புத்தூர்: மகளின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் 4 குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatotre Depressed Mother attempts to kill Children self
Coimbatotre Depressed Mother attempts to kill Children self

By

Published : Dec 12, 2019, 3:17 PM IST

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி அம்சவேணி, குழந்தைகள் சௌமியா, சத்யபிரியா, மணிகண்டன், சபரிநாதன் ஆகியோருடன் பீளமேடு அடுத்த தண்ணீர்பந்தல் தியாகி குமரன் வீதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கோவிந்தராஜன் இரண்டாவது மகள் சத்திய பிரியாவுக்கு நுரையீரல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்காக அம்சவேணி அவருக்கு தெரிந்தவர்களிடம் மருத்துவ சிகிச்சைக்கும், குடும்ப செலவுக்கும் பணம் கேட்டுள்ளா்.

பணம் ஏதும் கிடைக்காததால் அம்சவேணி மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கோவிந்தராஜ் வேலை காரணமாக வெளியே சென்றபோது அம்சவேணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று இரவு அரளி விதையை அரைத்து குழந்தைகளுக்கு கலந்துகொடுத்த அம்சவேணி தானும் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

திடீரென மனம் மாறிய அம்சவேணி, தனது குழந்தைகளுடன் ஆட்டோவில் ஏறி கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று, விஷம் சாப்பிட்டது குறித்து மருத்துவர்களிடம் விளக்கியுள்ளார்.

இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளின் சிகிச்சைக்காக பணம் கிடைக்காததால் குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : அவரது நிலத்தில் சுவர் எழுப்பினார்... அது எப்படி தவறாகும்?

ABOUT THE AUTHOR

...view details