தமிழ்நாடு

tamil nadu

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்!

By

Published : May 11, 2023, 11:10 PM IST

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூவைச் சேர்ந்தவர்கள் சுவாமிநாதன் - ஜெயசுதா தம்பதி. இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இருவரும் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தனர்.

இந்த நிலையில் அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய இரண்டு பேரும் 600 மதிப்பெண்ணுக்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். சிறுவயதில் இருந்தே பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்தாலும், படிப்பு விஷயத்தில் போட்டி போட்டு படிக்கும் இருவருக்கும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர்.

நிரஞ்சன் கம்ப்யூட்டர் சயின்ஸ், நிவேதா பிசினஸ் மேக்ஸ் என இருவரும் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் படித்தாலும், வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுத சென்றாலும் இறுதியாக வந்த மொத்த மதிப்பெண்ணை ஒரே மாதிரியாக எடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இருவரில் யார் பெரியவர்? யார் திறமைசாலி என்கின்ற போட்டிக்கு இடமில்லாமல் இருவரும் சமம் என்பதை குறிக்கும் வகையில் மதிப்பெண் வெளியாகி உள்ளதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

இதையும் படிங்க:மாணவி நந்தினிக்கு இல்லம்தேடி சென்று கவிஞர் வைரமுத்து தங்கப்பேனா பரிசு!

ABOUT THE AUTHOR

...view details