கோவை வைசியாள் வீதி கெம்பட்டடி காலனியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய மனைவி தனலட்சுமி (62). இவர்களுக்கு ஜெயந்தி என்ற மகளும், பிரகாஷ் பாகு, ரமேஷ், மணிகண்டன் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். சிவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மணிகண்டன் தவிர பிற அனைவருக்கு திருமணமாகிவிட்டது. இதனால் மணிகண்டனுடன் தனலட்சுமி வசித்துவந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று (செப். 30) வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். இதனையடுத்து இரவு தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மணிகண்டன், தாய் ரத்த வெள்ளத்தில் கழுத்தில் கத்தி பாய்ந்த நிலையில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தனலட்சுமி அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.