கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வெங்கடேஷ். இவர் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் தனது இரு மகள்களான காயத்ரி (9), கீர்த்தனா (7) ஆகியோரை பள்ளியில் விடுவதற்கு அழைத்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ரத்தினபுரி புதுப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்ற வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவிகள் இரண்டுபேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த வெங்கடேசனை சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து துணை ஆணையர் உமா, விபத்து நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.