கோவையில் இன்று (ஆகஸ்ட் - 31 ) 589 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 490ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் ஒரே நாளில் 500 தாண்டிய கரோனா பாதிப்பு - கோவை கரோனா நிலவரம்
கோவை : இன்று (ஆகஸ்ட் - 31 ) ஒரே நாளில் 589 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 490ஆக உயர்ந்துள்ளது.
![கோவையில் ஒரே நாளில் 500 தாண்டிய கரோனா பாதிப்பு Coimbatore Latest Corona Update](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:00:34:1598884234-tn-cbe-02-corona-update-photo-script-tn10027-31082020183220-3108f-1598878940-630.jpg)
Coimbatore Latest Corona Update
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 436 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 469ஆக உயர்ந்துள்ளது.
மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 299 ஆக உயர்ந்துள்ளது.