கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அதைத் தடுக்கும்பொருட்டு பல்வேறு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும் இந்தச் சூழ்நிலை தொடர்ந்துகொண்டே இருப்பதால் தமிழ்நாடு அரசு நிவாரணத்திற்கான நிதி உதவியினை மக்களிடத்தில் கேட்டுவருகிறது.
இந்நிலையில் மருத்துவப் பொருள்கள் வாங்குவதற்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுப் பொருள்கள், பாதுகாப்புப் பொருள்கள் வாங்கிடவும் மக்கள் தங்களால் முடிந்த நிதியினை வழங்கி உதவிட தமிழ்நாடு அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.