தமிழ்நாடு

tamil nadu

கோவை ஆட்சியரிடம் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கிய ஐஜி பெரியய்யா!

By

Published : Apr 20, 2020, 1:00 PM IST

கோவை: மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் (ஐஜி) பெரியய்யா முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ஒரு லட்சம் ரூபாய் காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கினார்.

கோவை ஐஜி வழங்கிய நிவாரணநிதி
கோவை ஐஜி வழங்கிய நிவாரணநிதி

கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அதைத் தடுக்கும்பொருட்டு பல்வேறு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும் இந்தச் சூழ்நிலை தொடர்ந்துகொண்டே இருப்பதால் தமிழ்நாடு அரசு நிவாரணத்திற்கான நிதி உதவியினை மக்களிடத்தில் கேட்டுவருகிறது.

இந்நிலையில் மருத்துவப் பொருள்கள் வாங்குவதற்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுப் பொருள்கள், பாதுகாப்புப் பொருள்கள் வாங்கிடவும் மக்கள் தங்களால் முடிந்த நிதியினை வழங்கி உதவிட தமிழ்நாடு அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

கோவை ஐஜி வழங்கிய நிவாரண நிதி

அதனைத் தொடர்ந்து பிரபலங்கள், மக்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியை காசோலை மூலம் வழங்கிவருகின்றனர். இந்நிலையில் இன்று மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பெரியய்யா முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூபாய் ஒரு லட்சம் காசோலையை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: ஊரடங்கை மீறி இறுதிச் சடங்கு - லட்சக்கணக்கில் கூடிய மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details